மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 12 Jul 2021, 10:56:12 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
ஈரோடு தெற்கு மாவட்டம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில்
தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில்
ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன் - அந்தியூர் எஸ்.ஆர்.கிருஷ்ணன், Ex.M.L.A., திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வி.மணிமேகலை உள்ளிட்ட
100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (11.7.2021), காலை, ஈரோடு தெற்கு மாவட்டம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன் - அந்தியூர் எஸ்.ஆர்.கிருஷ்ணன், Ex.M.L.A., திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வி.மணிமேகலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., - துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு எஸ்.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
***