மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் தஞ்சை மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கு. பரசுராமன், Ex.M.P., தலைமையில் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
பதிவு: 31 Aug 2021, 10:41:11 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
தஞ்சை மத்திய மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
கு. பரசுராமன், Ex.M.P., தலைமையில்
கு. பரசுராமன், Ex.M.P., தலைமையில்
70க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் - உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (30.8.2021) மாலை, தஞ்சை மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கு.பரசுராமன், Ex.M.P., தலைமையில் 70க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மாண்புமிகு எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் துரை. சந்திரசேகரன், எம்.எல்.ஏ., தஞ்சாவூர் நகரச் செயலாளரும் - தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், எம்.எல்.ஏ., ஒரத்தநாடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மாவட்டப் பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தஞ்சை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
***