கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் எஸ்.பிரகாசம், வி.பிரேமா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
பதிவு: 03 Nov 2021, 11:29:09 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் எஸ்.பிரகாசம், வி.பிரேமா ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (2.11.2021) மாலை, நாமக்கல் கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் எஸ்.பிரகாசம் மற்றும் வி.பிரேமா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், இராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., இராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.