New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த ஆரணி ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி பச்சையம்மாள் சீனுவாசன் திமுகவில் இணைந்தார்.

பதிவு: 25 Jan 2022, 10:56:12 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
ஆரணி ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி பச்சையம்மாள் சீனுவாசன்
தி.மு.க.வில் இணைந்தார்
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.1.2022) மாலை,  திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆரணி ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி பச்சையம்மாள் சீனுவாசன் தி.மு..வில் இணைந்தார்.
 
அதுபோது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி, ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு அமைச்சரும் - திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எ.வ.வேலு,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், மேற்கு ஆரணி(தெற்கு) ஒன்றியச் செயலாளர் தட்சணாமூர்த்தி, மேற்கு ஆரணி (வடக்கு) ஒன்றியச் செயலாளர் வெள்ளை கணேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விண்ணமங்கலம் ரவி, மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
***