கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மதுரை மாநகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுரை மாநகராட்சி 62வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்.
பதிவு: 26 Feb 2022, 10:30:56 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
மதுரை மாநகராட்சியில்
சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற
மதுரை மாநகராட்சி 62வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன்
தி.மு.க.வில் இணைந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (25.2.2022) காலை, நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மதுரை மாநகராட்சி 62 வார்டில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.கவில் இணைந்தார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மை செயலாளர் மாண்புமிகு கே.என். நேரு மற்றும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் - மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினருமான மா.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
***