New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்கள் மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவியர்களுக்கு நிதியுதவி

பதிவு: 14 Dec 2020, 13:06:50 மணி

கழகத் தலைவர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு  மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் இடம்  கிடைக்கச்  செய்திட வலியுறுத்தி  போராட்டம் நடத்தியதன் விளைவாக தமிழகத்தில்  உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர்  மருத்துவப்  பட்டப்படிப்பு  பயில இடம் கிடைத்தது.
இன்று (2.12.2020) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் அவர்களை, மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்த கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  அரசு பள்ளி மாணவ, மாணவியர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு;

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், பரிகம் ஊராட்சியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகள் ம.மதுமிதா ஐந்தாண்டு மருத்துவ படிப்புக்கான செலவினை கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தா.உதயசூரியன்,எம்.எல்.ஏ. ஏற்றுக் கொண்டார். அதற்கான காசோலையினை கழகத் தலைவர் அவர்கள் மாணவியிடம் வழங்கினார்.

அத்துடன், சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட இந்துஜா, காவியா, கோபிநாத், உமாதேவி, காயத்ரி ஆகிய அரசு பள்ளி மாணவி, மாணவர்களுக்கான மருத்துவ படிப்புக்கான உதவித் தொகையினை கழகத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தா.உதயசூரியன், எம்.எல்.ஏ., சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.