New - DetailPage - DMK
header_right
தந்தை பெரியார் அவர்களின் 47-ஆவது நினைவுநாளை முன்னிட்டு கழகத் தலைவர் அவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்

பதிவு: 26 Dec 2020, 11:41:12 மணி

இன்று (24-12-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் 47-ஆவது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை - அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47-ஆவது நினைவு நாள் இன்று! 
சமூக அடிமைத்தனம் தொடரும் வரை - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்!
அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! என தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.