New - DetailPage - DMK
header_right
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (4-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு

பதிவு: 04 Mar 2021, 14:20:24 மணி

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திரு.தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (4-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில்  6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி  பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், டி.இரவிக்குமார், எம்.பி., பொருளாளர் முகமது யூசுப் - கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.