New - DetailPage - DMK
header_right
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்களும், இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்தாய்வு

பதிவு: 09 Mar 2021, 10:19:19 மணி

 நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்களும், இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்தில்   1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால்  -  கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., ஆ.இராசா,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., செய்தி தொடர்புச் செயலாளர்  டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.